Wednesday, September 24, 2014

பாலியற்படுத்தப்பட்ட பெண்களும் இந்தியத் திரைத்துறையும்!






பாலியற்படுத்தப்பட்ட ரீதியில் பெண்களைக் காண்பிப்பதை இந்திய திரைப்படங்கள் தொடர்ந்து கையாண்டு வருகின்றன.

வணிக நோக்கில் இந்தியத் திரைப்பட இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும், ஏன் இந்திய நடிகைகள் சிலரும் கூட இந்த யுக்தியை மேற்கொள்வது வருந்தத் தக்க விடயமாகவேயுள்ளது.

அண்மையில், ஐக்கிய நாடுகளின் அனுசரணையில் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், பெண்களைப் பாலியற்படுத்தி காண்பிக்கும் திரைப்படங்கள் பட்டியலில் இந்தியத் திரைப்படங்கள் முன்னிலை பெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தியத் திரைப்படங்களில் பெண்களை பொறியலாளராகவோ, மருத்துவராகவோ அல்லது சொல்லத்தக்க நிலையில் உள்ள தொழிற்துறைகளில் முன்னிலை பெற்றவர்களாகவோ காண்பிப்பது குறைவாகவே காணப்படுகிறது எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

என்றாலும், பாலியற்படுத்தப்பட்ட, பாலியல் உணர்வைத் தூண்டத்தக்க வகையில் எல்லா நாட்டுத் திரைப்படங்களிலும் பெண்களைப் பயன்படுத்தும் நடைமுறை இருந்து வருகின்றது.

அரைகுறை ஆடைகளுடனோ, ஆடைகள் இல்லாமலோ, மெல்லிய ஆடைகளுடனோ மிகக் கவர்ச்சியாகக் காண்பிப்பதை திரைப்படத்துறையினர் கையாண்டு வருகின்றனர்.

இந்திய திரைத்துறையில் 35 வீதமாகவுள்ள இந்த நிலைக்கு மாறாக பெண் எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள் போன்றோரின் எண்ணிக்கை வீதம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

இதேவேளை, பெண் இயக்குனர்களின் உலகசராசரி வீதம் 7 ஆகவும் இந்திய சராசரி 9.1 ஆகவும் உள்ளது.

என்றாலும், பெண் எழுத்தாளர்களின் உலகசராசரி வீதம் 19.7 உள்ள நிலையில் இந்திய பெண் எழுத்தாளர்களின் வீதம் வெறும் 12.1.

அத்துடன், பெண் தயாரிப்பாளர்களின் உலக சராசரி வீதம் 22.7, ஆனால் இந்திய பெண் தயாரிப்பாளர்களின் வீதம் 15.2 ஆக உள்ளது.

திரைப்படத்துறை இலாபநோக்கில் மட்டுமே செயற்படும் வரையில் இந்த நிலை தொடரத்தான் செய்யும் என்பது வேதனைக்குரிய விடயம்!



No comments:

Post a Comment