உந்தன் தேசத்தின் குரல்
தொலைதூரத்தில் உள்ளதோ
செவியில் விழாதா.
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா
அந்த நாட்களை நினை
அவை நீங்குமா உனை நிழல் போல் வராதா.
அயல் நாடுந்தன் வீடல்ல விடுதியடா தமிழா
வானமெங்கும் பறந்தாலும்
பறவை என்றும் தன் கூட்டில்
உலகம் எங்கும் வாழ்ந்தாலும்
தமிழன் என்றும் தாய்நாட்டில்
சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும்
அங்கு செல்வ மரம் காய்த்தாலும்
உள் மனத்தின் கூவல் உந்தன் செவியில் விழாதா?
உந்தன் தேசத்தின் குரல்
தொலைதூரத்தில் உள்ளதோ செவியில் விழாதா.
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா
கங்கை உனை அழைக்கிறது
யமுனை உனை அழைக்கிறது
இமயம் உனை அழைக்கிறது பல சமயம் உனை அழைக்கிறது
கண்ணாமூச்சி ஆட்டம் அழைக்கும்
சின்ன பட்டாம்புச்சி கூட்டம் அழைக்கும்
ெதன்னந்தோப்பு துறவுகள் அழைக்க
கட்டிக்காத்த உறவுகள் அழைக்க
நீதான் தின்ற நிலாச்சோறுதான் அழைக்க
உந்தன் தேசத்தின் குரல்
தொலைதூரத்தில் உள்ளதோ செவியில் விழாதா.
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா
பால் போலுள்ள வெண்ணிலவு
பார்த்தால் சிறு கறையிருக்கும்
மலர்போலுள்ள தாய் மண்ணில்
மாறாத சில வலியிருக்கும்
கண்ணீர் துடைக்க வேண்டும் உந்தன் கைகள்
அதில் செழிக்க வேண்டும் உண்மைகள்
இந்த தேசம் உயரட்டும் உன்னாலே
மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே
அன்புத் தாயின் மடியுன்னை அழைக்குதே தமிழா
உந்தன் தேசத்தின் குரல்
தொலைதூரத்தில் உள்ளதோ செவியில் விழாதா.
சொந்த வீடுன்னை வாவென்று அழைக்குதடா தமிழா
செவியில் விழாதா….
No comments:
Post a Comment