Tuesday, June 16, 2009

மறக்க முடியுமா...?





உலக மேடையில்
மனித ஜாதியின்
உறவு நாடகங்கள்

நடந்த பிறகும் நம்
நினைவில் தங்கிடும்
இதய ஞாபகங்கள்

இனிமையானவை என்ற போதும்
கொடுமையானவை என்ற போதும்
மறக்க முடியுமா...?



ஒரே நாளில் காதல் பூத்துவிடும்
உற்றார் பெற்றார் பாசம் தோற்றுவிடும்
உயிரை விடவும் காதல் பெரிதாய் தோன்றலாம்

அதே காதல் வண்ணம் மாறிவிடும்
பகல் காற்றாய் வாழ்க்கை ஆகிவிடும்
உயிரை விடவும் காதல் புரிந்தோர் துணியலாம்...

ஜெயித்த காதல்கள் ஆன போதும்
மறைத்த காதல்கள் ஆன போதும்
மறக்க முடியுமா...?




சீதா ராமன் காதல் சாவதில்லை
ஆனால் யாரும் ராமன் ஆவதில்லை
சீதையாக பெண்கள்
மட்டும் வாழ்வதேன்?

உயிர் பூவை காதல் கொய்கிறதே...
கொலைத் தொழிலை காதல் செய்கிறதே...
சாவில்லாமல் காதல் மட்டும் வாழ்வதேன்?

இந்த கேள்விகள் எழுந்த பின்பும்
இடறி காதலில் விழுந்த பின்பும்
மறக்க முடியுமா..?

No comments:

Post a Comment