Sunday, January 31, 2010

அகதியின் புலம்பல்




ஐயோ...
நான் மூச்சுத் திணறிச்
சாகப் போறன்...
இந்த கௌரவங்கள்
என்ற சாவைத் தடுக்குமே?

வெளியால எவ்வளவு
காத்து வீசுது!
தவழ்ந்து...தடவி...
மெல்ல அணைத்து
சீறிச்சுழன்று பூட்டி வைத்து
புளித்து நாறும்
இந்த அறையில்
கிடந்து புழங்கிச் சாக
என்னால் ஏலாது!

இந்த நாலு சுவரையும்
கிடுகு வேலியையும் தாண்டி
நான் வாழப்போறன்
காத்தோட கைகோத்து
சுதந்திரமா உலாவி
நான் வாழவேணும்!

No comments:

Post a Comment