Friday, January 22, 2010

கருவறைக் கண்ணீர்

முகம் தெரியா தாயே...
உன் கருவறையிலிருக்கும்
கடைசி மகள் எழுதும்
கண்ணீர்க் கடிதம்!

உன் வயிற்றுச் சுவர்களில்
என் சுட்டுவிரல் தீட்டும்
ஓவியம் புரிகிறதா?

நீ பிரசவித்த என்
முன்னவர்களைக் காணோமென்று
நீ கதறும் ஒலி என்
காதுகளுக்குக் கேட்கிறது!

காணாமல் போன சகோதரம்
காலில்லா அப்பா
பூப்பெய்திய அக்கா
ஓட்டை வீட்டில்
கிளிந்த துணியுடன் நீ
இதற்கிடையில் நான் ஏனம்மா?

(நன்றி சுசி)

No comments:

Post a Comment