'இதோ... பாம்பை விழுங்கப் போகிறேன்... விழுங்கப் போகிறேன்” என்று ஒலி பெருக்கி ஒலிக்க, தாரை தப்பட்டை முழங்க, பலரும் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க, தன் கையிலிருந்த பாம்பைச் சுருட்டி, மடக்கி வாயில் போட்டு விழுங்கினான் அந்தப் பாம்பாட்டி. உயிரோடு தொண்டைக் குளிக்குள் போனது அந்தப் பாம்பு.
இந்தத் தொடர் விழுங்கலைப் பார்த்து அதிர்ந்துபோன பாமரன் ஒருவன் கடவுளைக் கூப்பிட்டான். பக்தனின் குரலுக்கு செவிசாய்த்த பகவான் அவன் முன் தோன்றினார். பகவானிடம் பக்தன் பயத்துடன் கேட்டான், 'அடுத்து மனிதனை விழுங்கக் காத்திருக்கும் படைப்பு எது?” பகவான் சொன்னார், 'வேறு எது? இன்னொரு மனிதன் தான்!”
விழுங்கி வாழும் கூட்டத்தில் விழுங்கத் தெரியாமல் வாழ்பவன் பைத்தியக்காரனா? அடுத்தவற்றை அடித்துச் சாப்பிட்டே பழகிவிட்டன உலகப் படைப்புக்கள் அனைத்தும்!
No comments:
Post a Comment