Thursday, August 26, 2010

என் அம்மாவுக்கு…
























கரு ஏற்று உருத் தந்த உத்தமியே…
உன் கருவறை எனக்கு சிறையல்ல
நான் கைதியாகவே காலமெல்லாம்
உன்னுள் சிறைப்பட்டிருக்க விரும்புகிறேன்.

அம்மா என் ஆன்மாவே - நீ
ஆயிரம் ஆண்டவனுக்கும் ஈடில்லை!
என் உயிரெழுத்தின் உண்மைப் பொருள் நீயம்மா!

உலக மொழிகளை எல்லாம்
அணிதிரட்டிச் சொன்னாலும் - அங்கு
முற்றுப் பெறாமல் நிற்கும் உன் அன்பு!

எனக்கு பிறப்பொன்றைக் கொடுத்த
உன் பிறப்பிற்காய் இன்று
இறைவனுக்கு நன்றி கூறுகிறேன்..!

(27.08 - என் அன்பு அம்மாவின் பிறந்த நாள்!)

1 comment:

  1. தன் உதிரம் தந்து நமக்கு உயிர் கொடுத்த தாய் பற்றிய கவிதை வரிகள் நெஞ்சை வருட வைக்கின்றது ... எம்மையும் குழந்தை பருவத்திற்கு அழைத்துச்சென்ற சகோதரி Miss free bird க்கு நன்றி ...

    ReplyDelete