Wednesday, July 13, 2011

இது ரோபோக்களுக்கு…











ரோபோ ஒன்று
என்னுடன் பேசியது…
என் குறைகளை - அது
பட்டியலிட்டது!


பிடிவாதக்காரி என்பதற்காய்
பிடிக்கவில்லையாம்
பிதற்றியது!
பிழை என்மீதல்ல
பிடிவாதம் - என்
திடகாத்திரம்!


கோபம் அதிகமாம்…
குறைபட்டுக்கொள்ள
நான் தயாரில்லை
உணர்வற்ற ஜடமாய்
பிறக்க நேர்கையில்
குறைத்துக் கொள்கிறேன்!


வாயாடி நான் என
வாதாடியது…
வருத்தமில்லை,
வாயுள்ள பிள்ளை
பிழைத்துக் கொள்ளுமாம்!


நட்பு வட்டாரம்
நல்லதில்லையாம்…
துயரங்களின் போது
தோள்கொடுக்கும் உறவுகளை
தொலைக்கச் சொல்கிறது!


பொய்யுரைத்தேனாம்…
புணைக்கதைகள் சொல்லி
புகழ் சேர்க்க - நான்
புத்தகம் எழுதவில்லை
புரிந்துகொள்ள அதற்கு
புத்தி போதவில்லை!


நடத்தையில்
நம்பிக்கை இல்லையென
நாசூக்காய்ச் சொன்னது…
சிலம்புடைத்து
மதுரையை எரித்த
கண்ணகியை மட்டும் தான்
கற்புடையவள் என்றால்
காலம் தான் இதற்கு
பதில் சொல்ல வேண்டும்
என் காதலன் ரோபோவே..!!!

No comments:

Post a Comment