Thursday, September 12, 2013

இது ஆதிக்கவாதிகளுக்கு!!!

சமூக இணையத்தளங்களில் கண்ணில் கண்ட ஒரு விடயம் மனதை உறுத்தியது.

எங்காவது பெண்களுக்கெதிரான வன்முறைகளும் வன்புணர்வுகளும் இடம்பெற்றவுடனேயே, சிலர் "பெண்களே, வெளியில் தனியே செல்லாதீர்கள், உடலை மறைத்து உடை அணியுங்கள், முகத்திரை அணியுங்கள், முகப்புத்தகத்தில் முகத்தைக் காட்டாதீர்கள்" என்றெல்லாம் தமது பங்கிற்கு அறிவுரைகளை வாரிவழங்க ஆரம்பித்துவிடுகின்றனர்.

ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், தமது மதத்தையும் சடங்குகளையும் ஒப்புமைப்படுத்தி 'தன்னிகரற்றவர் தாமே' என காட்டிக்கொள்ள முயல்கின்றனர்.

தமது மார்க்கத்தைத் தழுவினால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதென தம் பங்கிற்கு வாதத்தை முன்வைக்கின்றனர்.





 ஏன், ஆண்களுக்கான நன்நடத்தைகள் பற்றி எந்த மதத்திலும் சொல்லப்படவில்லையா?

பெண்களுக்கான நடத்தைக் கோவைகளை முன்வைக்க வருபவர்களே, உங்களிடம் ஒரு கேள்வி, ஆண்களுக்கான நல்ல நடத்தைகளைச் சொல்லிக்கொடுக்கும் விதமான பதாதைகளையும் படங்களையும் உலவ விடுவதில் உங்களுக்குள்ள பிரச்சினை என்ன?

ஒரு சில பழமைவாதிகளோ, "முள் மேல் சேலை விழுந்தாலும் சேலை மேல் முள் விழுந்தாலும் சேதம் என்னவோ சேலைக்குத்தான் என்கின்றனர்.

இதையெல்லாம் பார்க்கும்போது '' ச்சே...என்ன விதமான சமூகத்தில் வாழ்கிறோம்..." என்ற எண்ணம் தான் தோன்றுகிறது!

ஐயா, ஆதிக்கவாதிகளே!

ஆண்களைப் போலவே ஆசைகளும் கனவுகளும் எங்களுக்கும் உண்டு என்பதை மறக்காதீர்கள்!!!

No comments:

Post a Comment