கட்டுக்கடங்காமல் போன கணவர்!
“இப்போது விசயம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. என்
கணவர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார். அதில் எனக்கு சந்தேகமே இல்லை, பல
சமயங்களில் அவரது ஷேர்ட்டில் நீண்ட தலைமுடிகளைக் கண்டிருக்கிறேன்...”
இது முல்லா நஸ்ருதீனின்
மனைவியின் புலம்பல்...
இதைக் கேட்டுக்கொண்டிருந்த முல்லாவின்
நண்பர், ‘சரி இருக்கட்டும், இன்றும் எதையாவது
பார்த்தாயா?’ என்றார்.
இன்று நான் மிக நுணுக்கமாக
சோதனையிட்டேன், ஆனால் ஒன்றையும் காணவில்லை, அதனால் தான் அழுகிறேன், என்றார்
முல்லாவின் மனைவி.
நண்பர் கொஞ்சம்
குழப்பத்துடன், “அப்படியானால், சந்தோசப்படாமல் ஏன் அழுது
வடிக்கிறாய்? எனக் கேட்டார்.
“இல்லை... இல்லை... இப்போதுதான் பிரச்சினை எல்லை
மீறியுள்ளது... அவர் இப்போது தலை வழுக்கையான பெண்களுடனும் பழகத்
தொடங்கிவிட்டார்... இதை என்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை” எனக்
கூறி ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டார் முல்லாவின் மனைவி!!!
ஒன்றுமில்லைங்க, சின்னதா ஒரு
தகவல், நமக்கு சந்தோசத்தைக் கொடுக்கக்கூடிய விசயங்களையும் துக்கத்தைத் தரக்கூடிய
விசயங்களையும் தேடிக்கண்டுபிடிப்பது என்னவோ நாம் தான்!!!
இன்பமும் துன்பமும் நமக்குள்
தான்...
No comments:
Post a Comment