Thursday, January 14, 2016

வெருண்டோடும் காளைகளும் மதம் சார் விலங்குரிமையும்














அடைபட்டு, வெருண்டோடும் காளைக்கு வெறி பிடிக்க வேண்டும் என்பதற்காய் அதன் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தூவுதல், சேறு, சகதி பூசுதல், வாலைக்கடித்து திருகுதல், ஐந்தாறு பேர் சேர்ந்து அடக்குதல் போன்ற காரணங்களால் எனக்கும் சல்லிக்கட்டு எனும் ஏறுதழுவல் விளையாட்டு மீது இளம்பராயத்திலிருந்தே உடன்பாடு இல்லை.

மாட்டுக்கறி சாப்பிடுவதை விட நெல் சாப்பிடுவது கூட மிருக வதைக்கு துணைபோதல் தான் என்றார் நண்பர். உண்மை தான், உழவுக்காக ஏரில் காளைகளைப் பூட்டுதலும், பார மூட்டைகளைக் கட்டியிழுக்க அவற்றைப் பயன்படுத்துதலும் ஒரு வகையான மிருகவதை தான்.

என்றாலும், ட்ராக்டர் வரவால் மனிதர்கள் கணிசமானளவு காளைகளின் பயன்பாட்டை விவசாயத்துறையில் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது.

நாகரிக வளர்ச்சி அடைந்துள்ளதாகக் கொண்டாடும் மனித இனம் முடிந்தளவு விலங்குகளுக்கும் இயற்கைச்சூழலுக்கும் தொல்லையற்றதாகத் தனது இருப்பை வைத்துக்கொள்ளவேண்டும் என்பதுதான் நியாயம்.
அதேவேளை, விலங்குணவை முற்றாகத் தடுக்க நினைப்பதெல்லாம் இயற்கையினதும் சமூகத்தினதும் யதார்த்தத்தை உணராத வறட்டுச் சிந்தனையாகும்.

தவிர, புனிதமாகக் கருதப்படும் விலங்குகளுக்கு மாத்திரம் அன்பையும் நேசத்தையும் காட்டிவிட்டு ஏனைய விலங்கு வதைகளைக் கண்டுங்காணாமல் இருக்கும் மனித குணம் கண்டிக்கத்தக்கது.

இனம், மதம், பண்பாடு சார்ந்து விலங்குரிமைகளைப் பாகுபடுத்திப் பார்க்காமல் பொதுவான நோக்கோடு, எம்மால் இயன்றளவு விலங்குகளை வதைகளிலிருந்து மீட்போம்.


No comments:

Post a Comment